Thursday, January 19, 2023

தள்ளப்பட்டவர்களை தலைசிறந்தவர்களாக மாற்றும் தேவன்!

அநேக ஜனங்கள் ஏதோ ஒரு விதத்திலே புறக்கணிப்புகளை சந்திக்கிறார்கள். புறக்கணிக்கப்பட்டவர்களுக்குத் தான் புறக்கணிப்பின் வலி தெரியும். யார் உங்களை புறக்கணித்தாலும், ஓரங்கட்டினாலும், ஒதுக்கித் தள்ளினாலும் கலங்காதீர்கள். கர்த்தர் உங்களைச் சேர்த்துக் கொள்வார். அவர் உங்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடி சூட்டுவார்.

கானாவூர் கல்யாண வீட்டில் ஆறு கற்ச்சாடிகள் இருந்தன. மனிதர்கள் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்படி  தண்ணீர் நிரப்பி வைக்கும் பாத்திரங்கள் அவை. விருந்தினர்களை உபசரித்து அமர வைக்கும் அறைக்கு வெளியே அவை வைக்கப்பட்டிருக்கும். அவை அவ்வளவு கனத்துக்குரிய பாத்திரங்கள் அல்ல. ஒரே கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் மற்ற பாத்திரங்களில் ஊற்றப்படும் போது அது சமையலறைக்குச் செல்லும் ஆனால் இந்த கற்பாத்திரத்தில் ஊற்றப்படும் நீர் சமையலறையைப் பார்ப்பதே இல்லை. அந்த கற்சாடிகளிலே சேர்வதெல்லாம் புறக்கணிக்கப்பட்டதாக மாறிவிடுகிறது.

அந்த கானாவூர் கல்யாண வீட்டுக்கு இயேசுவும் சீஷர்களும்  அழைக்கப்பட்டிருந்தார்கள். இயேசு கிறிஸ்து அங்கு தனது முதல் அற்புதத்தைச் செய்தார். அந்த வீட்டிலே அநேக விலையேறப்பெற்ற பாத்திரங்கள் இருந்திருக்கக் கூடும் ஆனால் கர்த்தர் அற்புதம் செய்யும்படி புறக்கணிக்கப்பட்ட கற்ச்சாடியைத் தெரிந்துகொண்டார். அதிலே ஊற்றப்பட்ட தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றினார். புறக்கணிக்கப்பட்ட கற்சாடி கனத்துக்குரிய பாத்திரமாக மாறிப்போனது. நீங்கள் எத்தகைய நிந்தைகளையும் அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறவர்களாக இருந்தாலும் அதே இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையை ஆசீர்வாதமானதாக மாற்ற விரும்புகிறவராக இருக்கிறார்.

செப்பனியா-3:19- "தள்ளுண்டவனைச் சேர்த்துக் கொள்வேன். அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்கு புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்."

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...