அடிமையாக எகிப்துக்கு சென்ற யோசேப்பை அவரது எஜமான் தனது வீட்டுக்கு அதிகாரியாகி வீட்டு விசாரணைக்காரன் என்ற உயர்ந்த பொறுப்பை கொடுத்து நல்ல விதமாக நடத்தினார். அமைதியாக சென்ற அவரது வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசியது. பாவம் செய்ய மறுத்ததால், யோசேப்பு செய்யாதவற்றை செய்ததாக கூறினார் அவரது எஜமானின் மனைவி. பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமான போத்திப்பரின் மனைவியின் வார்த்தையா? அல்லது ஊர் பெயர் தெரியாத ஒரு எபிரேய அடிமையின் வார்த்தையா? யாருடைய வார்த்தையை உலகம் நம்பும்? யோசேப்பு சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார். அவரது நியாயம் எடுபட்டு போனது. இந்த செய்தியை கேள்விப்படும் எந்த ஒரு மனிதனும் யோசேப்புக்கு ஆதரவாக நிற்கமாட்டான். ஆனால் கர்த்தரோ யோசேப்போடு இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது.
நாட்கள் சென்றது எந்த தேசத்திலே நிந்தைக்குரியவனாக பழிச்சொற்களுக்கு உரியவனாக யோசேப்பு காணப்பட்டாரோ அந்த தேசத்திற்கே கர்த்தர் அவரை அதிகாரியாக மாற்றிவிட்டார். உங்களை சுற்றி காணப்படும் பொல்லாத மனிதர்களாலே பரப்பப்படும் பொய்கள் அவதூறுகளைக் கண்டு கலங்காதிருங்கள். கர்த்தர் உண்மைக்கு துணை நிற்கிற தேவன். அவர் உங்களைப் பரிபூரண ஆசீர்வாதங்களாலே நிரப்புவார்.
சங்கீதம் 37:6 "உன் நீதியை வெளிச்சத்தை போலவும் உன் நியாயத்தை பட்ட பகலை போலவும் விளங்க பண்ணுவார்."
No comments:
Post a Comment