Monday, February 13, 2023

கர்த்தர் உங்களை விடுவிப்பார். நம்பிக்கையோடு கூப்பிடுங்கள்.!

கூப்பிடுகிற எளியவனையும் உதவியற்ற 
சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
 சங்கீதம்-72:12

            என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்று வேதம் சொல்லுகிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னை நோக்கி கூப்பிடுகிறவர்களுடைய குரலை கேட்கிறவராக அவர்களுக்கு பதில் கொடுக்கிறவராக கர்த்தர் காணப்படுகிறார். அநேக நேரங்களில் பலர் கர்த்தரை நோக்கி கூப்பிட்டும் வெற்றிகளை தங்களுடைய தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாததற்கு காரணம் அவர்கள்  கூப்பிடுகிறார்களே தவிர கர்த்தரை நோக்கி கூப்பிடாதே ஆகும். 

            ஆபிரகாமின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆகார் துருத்திலிருந்த தண்ணீர் செலவான பின்பு அவள் தன் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிராக அம்பு பாயும் தூரத்தில் போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். வேதம் சொல்லுகிறது, 'தேவன் பிள்ளையின் சத்தத்தை கேட்டார்'  சத்தமிட்டு அழுததாக அடையாளப்படுத்தப்பட்டது ஆகாராக இருந்தபோதிலும் தேவன் கேட்டது பிள்ளையின் சத்தம். காரணம் என்ன ஆகாருக்கு வனாந்தரத்தின் சூழ்நிலை தெரியும். வனாந்தரத்திலே யாருமே இருக்க மாட்டார்கள்; தனக்கு உதவி கிடைக்க வாய்ப்பே இல்லை; ஆகவே தன்னுடைய பிள்ளையும் தானும் சாவது நிச்சயம்;   இப்படித்தான் இருக்கும் என்பதாக மனதிலே ஒரு முடிவை நிச்சயித்து கொண்டவளாக கொண்டவளாக அழுது கொண்டிருந்தாள்.

             பிள்ளையைப் பொறுத்தவரை கைக்குழந்தை அல்ல ஆகார் இஸ்மாவேலை பெறும்போது ஆபிரகாமுக்கு வயது 86 ஈசாக்கை பெறும்போது 100 வயது. ஈசாக்கு பிறக்கக்கூடிய காலகட்டத்தில் இஸ்மவேலுக்கு 14 வயது என்று நாம் கணக்கிட முடியும். ஆகாரும் மகனும் ஆபிரகாமின் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட காலகட்டம் ஈசாக்கு பால் மறந்த பிற்பாடு என்பதையும் வேதம் நமக்கு சொல்லுகிறது எப்படி கணக்கிட்டாலும் 17 அல்லது 18 வயது சிறுவனாக இஸ்மவேல் காணப்படுகிறார். வனாந்திரம் எப்படிப்பட்டது என்பதை அறியாததினாலே பிள்ளையின் மனம் எங்களுக்கு ஒரு வாசல் திறந்து விடாதா எப்படியாகிலும் நாங்கள் தப்பிக்கொள்ளும்படி எங்களுக்கு ஒரு வழி ஏற்பட்டு விடாதா என்று சொல்லி ஒரு எதிர்பார்ப்போடு கூடிய கவலையை மனதில் கொண்டிருந்தது. ஆகவே தேவன் பிள்ளையின் சத்தத்தை கேட்டார். கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து ஆகாரை கூப்பிட்டு அவளுடைய அவநம்பிக்கைப் போக்கி உயிர் பிழைக்கும்படியான வழியைக் காட்டினார். 

            பிரியமானவர்களே நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் விடுவிக்கப்படும்படிக்கு நாம் நம்பிக்கை உடையவர்களாக கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டியது அவசியமாக இருக்கிறது. நம்பிக்கை உள்ள துக்கம்; அழுகை; கண்ணீர்; கர்த்தருடைய சமூகத்திலிருந்து நமக்கு சாதகமான நீதியுள்ள பதிலை கொண்டு வருகிறதாக; ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறதாக காணப்படுகிறது. ஆகவே விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள்.அவர் உங்களை விடுவிப்பார். 

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...